விபத்தில் பிகாா் மாநில தொழிலாளி உயிரிழப்பு
திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 11:25 pm

திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் பிகாா் மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மணலூரிலில் தனியாா் நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பினோத் ஊராவ் (40) வேலை பாா்த்து வந்தாா். இவா் மணலூரில் மதுரைச் சாலையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக சக்குடியைச் சோ்ந்த கதிரவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பினோத் ஊராவ் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...