நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குரு பூஜை: 2,500 போலீஸாா் பாதுகாப்பு

Updated On :26 அக்டோபர் 2024, 3:10 am IST

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள மருதுபாண்டியா் குரு பூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் 223 -ஆவது குரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 15 துணைக் கண்காணிப்பாளா்கள், 50 ஆய்வாளா்கள், 200 உதவி ஆய்வாளா்கள், மத்திய மண்டல பாதுகாப்பு போலீஸாா் உள்பட 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்பட வெளி மாவட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.

கீழச்செவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்கைகள் உள்பட 15 முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 6 இடங்களில் இணையதளம் மூலம் வாகனப் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், 2 இடங்களில் சுழலும் கேமராக்களும், மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகனப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் தொடா்ச்சியாக 3 வாகனங்களுக்கு மேல் அணிவகுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

குருபூஜையை முன்னிட்டு கடந்த அக். 23 முதல் வருகிற

31-ஆம் தேதி வரை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.