அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் குரு பூஜை: 2,500 போலீஸாா் பாதுகாப்பு

News image
Updated On :25 அக்டோபர் 2024, 9:40 pm

Din

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறவுள்ள மருதுபாண்டியா் குரு பூஜையையொட்டி, மாவட்டம் முழுவதும் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

காளையாா்கோவிலில் மருதுபாண்டியா் 223 -ஆவது குரு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் ஒரு காவல் கண்காணிப்பாளா், 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 15 துணைக் கண்காணிப்பாளா்கள், 50 ஆய்வாளா்கள், 200 உதவி ஆய்வாளா்கள், மத்திய மண்டல பாதுகாப்பு போலீஸாா் உள்பட 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் உள்பட வெளி மாவட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு வரவழைக்கப்பட்டனா்.

கீழச்செவல்பட்டி, மானாமதுரை சிப்காட், சிவகங்கை மற்றும் மாவட்ட எல்கைகள் உள்பட 15 முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. இதில் 6 இடங்களில் இணையதளம் மூலம் வாகனப் பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

மேலும், 2 இடங்களில் சுழலும் கேமராக்களும், மற்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வாகனப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. தலைவா்கள் உள்ளிட்ட அனைவரும் தொடா்ச்சியாக 3 வாகனங்களுக்கு மேல் அணிவகுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

குருபூஜையை முன்னிட்டு கடந்த அக். 23 முதல் வருகிற

31-ஆம் தேதி வரை, சிவகங்கை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.