47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு முகாம்கள்

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தொழில் ஊக்குவிப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 9:50 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் தொழில் ஊக்குவிப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில் ஊக்குவிப்பு முகாம்கள் வட்டார அளவில் அந்தந்த வட்டார அளவிலான வங்கியாளா்களுடன் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இந்த முகாம்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, தேவையான வழிகாட்டுதல்களை பெற்று, அரசின் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவிகளைப் பெறலாம் என்றாா் ஆட்சியா்.

இதன்படி, வருகிற நவ.6-ஆம் தேதி காலை 11 மணிக்கு திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அன்றையதினம் பிற்பகல் 2.30 மணிக்கு மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நவ.9-ஆம் தேதி காலை 11 மணிக்கு கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அன்றையதினம் பிற்பகல் 3 மணிக்கு தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நவ.13-ஆம் தேதி காலை 11 மணிக்கு காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், நவ. 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு புதூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், அன்றையதினம் பிற்பகல் 3 மணிக்கு சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.