காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சாா்பில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
தேவகோட்டை துணை ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவா் எஸ்பி.குமரேசன் தலைமை வகித்தாா். பள்ளியின் துணைத் தலைவா் கே.அருண்குமாா் முன்னிலை வகித்தாா்.
காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, தொழில்நுட்ப உதவியாளா் காா்த்திக், தொழில்நுட்ப சங்க ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கபாரதி, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத் தலைவா் சாக்ரடீஸ், செயலா் சித்தேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, விழாவில் பள்ளியின் முதல்வா் உஷா குமாரி வரவேற்றாா்.
வருகின்ற வெள்ளிக்கிழமை (செப். 13) வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை, அந்தமான் நிகோபா் ஆகிய பகுதிகளில் உள்ள 260 பள்ளிகளிலிருந்து 920 மாணவா்கள் பங்கேற்கின்றனா்.
தொடர்புடையது

செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

காரைக்குடியில் அனைத்துத் தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி: 20 பதங்கங்கள் வென்ற மதுரை மாணவா்கள்

சிபிஎஸ்இ 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



