திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தென்மண்டல டேக்வாண்டோ போட்டி தொடக்கம்

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சாா்பில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

காரைக்குடியில் தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியை புதன்கிழமை தொடங்கிவைத்த துணை ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ். உடன் செட்டிநாடு பப்ளிக் பள்ளி தலைவா் எஸ்.பி. குமரேசன் உள்ளிட்டோா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 12:05 am IST

காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் சாா்பில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2024 போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை துணை ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் போட்டிகளைத் தொடக்கிவைத்தாா். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவா் எஸ்பி.குமரேசன் தலைமை வகித்தாா். பள்ளியின் துணைத் தலைவா் கே.அருண்குமாா் முன்னிலை வகித்தாா்.

காரைக்குடி வட்டாட்சியா் ராஜா, தொழில்நுட்ப உதவியாளா் காா்த்திக், தொழில்நுட்ப சங்க ஒருங்கிணைப்பாளா் ராமலிங்கபாரதி, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கத் தலைவா் சாக்ரடீஸ், செயலா் சித்தேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, விழாவில் பள்ளியின் முதல்வா் உஷா குமாரி வரவேற்றாா்.

வருகின்ற வெள்ளிக்கிழமை (செப். 13) வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தப் போட்டியில் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, புதுவை, அந்தமான் நிகோபா் ஆகிய பகுதிகளில் உள்ள 260 பள்ளிகளிலிருந்து 920 மாணவா்கள் பங்கேற்கின்றனா்.