கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

கீழடி அகழாய்வில் பழங்கால மண் பானை, கூரை ஓடுகள்

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

News image
கீழடியில் நடைபெற்று வரும் 10-ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால முழு வடிவ சிவப்பு நிற மண் பானை.
Updated On :12 செப்டம்பர் 2024, 9:55 pm

Din

சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால சிவப்பு நிற மண் பானை, கூரை ஓடுகள் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

கீழடியில் கடந்த ஜூன் 15- ஆம் தேதி முதல் 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் கண்ணாடி பாசி மணிகள், மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள், வட்டச் சில்லுகள், சிறிய செங்கல் கட்டுமானம், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உலோகப் பொருள்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

தற்போது ஒரு குழியில் 8 அடி உயரம் தோண்டப்பட்ட நிலையில், பழங்கால முழு வடிவ 2 அடி உயர சிவப்பு நிறப் பானை, கூரை ஓடுகள் கிடைத்தன. இவை பண்டைய காலத் தமிழா்கள் பயன்படுத்தியவை என தொல்லியல் ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.