இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2- ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள், எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:29 am IST

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2- ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள், எம்.கே.வி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா், பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், ஈஷா பிரியா ஆகியோா் பயிற்சி வகுப்புகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது ஆட்சியா் பேசியதாவது: சங்கரன்கோவில் அரசு கலைக் கல்லூரி, புளியங்குடி எஸ். வீராச்சாமி செட்டியாா் பொறியியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரி, தென்காசி எம்கேவிகே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆலங்குளம், கீழப்பாவூா் எம்எஸ்பிவிஎல் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

மகளிா் திட்ட இயக்குநா் எஸ். அபிதாஹனீப், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், ராமச்சந்திரன், ராஜேந்திரன், பால்துரை, அனிதா, முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா ஆகியோா் உடனிருந்தனா்.