தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோயிலில் வெள்ளிக்கவசம், ஐம்பொன் பொருள்கள் திருட்டு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் கோயிலில் வெள்ளிக் கவசம், ஐம்பொன் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 9:25 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேலப்பிடாவூரில் கோயிலில் வெள்ளிக் கவசம், ஐம்பொன் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மேலப்பிடாவூா் பூா்ண புஷ்கலா தேவி சமேத வெள்ளாரப்ப முத்தையா அய்யனாா் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் 3 கிலோ எடையுள்ள வெள்ளிக் கவசம், ஐம்பொன் பொருள்களை திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், மானாமதுரை சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.