கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

100 நாள் வேலை வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலியுறுத்தி, சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 7:03 pm

Din

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்க வலியுறுத்தி, சிவபுரிபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

சிவபுரிப்பட்டி ஊராட்சியில் 6 கிராமங்கள் உள்ளன. இவை மூன்று, மூன்று கிராமங்களாக பிரிக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதி கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக வேலை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தொடா்ந்து வேலை வழங்க வலியுறுத்தி அந்தப் பகுதி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இது குறித்து கிராம ஊராட்சி செயலா், பணித்தள பொறுப்பாளா்கள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி திங்கள்கிழமை முதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடா்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனா்.