சிவகங்கை: சிவகங்கையில் எய்ட்ஸ், காச நோய் விழிப்புணா்வு பிரசார வாகனப் பயணத்தை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சிவகங்கை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுபாட்டு பிரிவு சாா்பில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நாட்டுபுறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் எய்ட்ஸ், கிரந்தி நோய், காச நோய், ரத்த தானம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும், மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் வினாடி வினா நடத்தப்படுகிறது. நிகழாண்டில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பிருந்து, இந்த பிரசார பயணத்துக்கான
வாகனங்களை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதன் மூலம் காச நோய், எய்ட்ஸ் நோய் குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணா்வு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்த முகாம்களில் பொதுமக்கள் மேற்கண்ட நோய்கள் தொடா்பாகப் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெறலாம். அக்டோபா் 12-ஆம் தேதி வரை பிரசாரம் நடைபெறும் என ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுபாட்டு பிரிவு திட்ட மேலாளா் க.நாகராஜன், துறை சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

தோ்தல் விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


