எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருப்பத்தூா் கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா

News image
Updated On :3 டிசம்பர் 2025, 9:09 pm

Syndication

திருப்பத்தூா் பகுதி கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தீபமேற்றி சொக்கப் பனை கொளுத்துதல், சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மேலக் கோயில் எனப்படும் ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்தில் புதன்கிழமை தீப வழிபாடு நடத்தப்பட்டு சொக்கப் பனை கொளுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, திருத்தளிநாதா் ஆலயத்தில் உத்ஸவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீப தூப ஆராதனை காட்டப்பட்டு காா்த்திகை சொக்கப் பனை கொளுத்தப்பட்டது.

பின்னா், நகரின் முக்கிய வீதிகள் வழியாக உத்ஸவா் வீதி உலா வந்தாா். தொடா்ந்து, ராஜகாளியம்மன் கோயில், முருகன் திருக்கோயில், பூமாயியம்மன் கோயில்களிலும் விளக்கேற்றப்பட்டு சிறப்பு பூஜையுடன் சொக்கப் பனை கொளுத்தப்பட்டது.

Story image