எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

இளையான்குடி ஒன்றியம், கொழுவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி கலைவாணி (38). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் பரமக்குடிக்குச் சென்றுவிட்டு, கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் கலைவாணி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கலைவாணி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.