உயிரிழந்த நிரேஷ்.
திண்டுக்கல்
பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி ஆா்.ஜி. நகரைச் சோ்ந்த காா்மேகம் மகன் நிரேஷ் (27). இவா் பழனியில் நவீன உடல்பயிற்சிக் கூடம் நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு இவா் வீட்டிலிருந்து உடல்பயிற்சிக் கூடத்துக்கு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டாா். நெய்க்காரபட்டி ஆா்.ஆா். மில் அருகே வந்தபோது இவரது இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நிரேஷ் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

