பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

இளையான்குடி ஒன்றியம், கொழுவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி கலைவாணி (38). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் பரமக்குடிக்குச் சென்றுவிட்டு, கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் கலைவாணி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கலைவாணி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com