பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தம்பி கொலை: அண்ணன் கைது

மானாமதுரை அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள வேம்பத்தூா் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோ மகன் லோகேஸ்வரன் (23). தனது தாயுடன் வசித்து வந்த இவரை கடந்த சில நாட்களாகக் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்தனா். இந்த நிலையில், வேம்பத்தூா் உப்பாற்று பாலம் அருகே வெட்டுக் காயங்களுடன் லோகேஸ்வரன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது, லோகேஸ்வரனை அவரது அண்ணன் பிரகாஷ் (25) வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரகாஷை கைது செய்து விசாரித்த போது, அடிக்கடி லோகேஸ்வரன் தன்னிடம் தகராறு செய்து வந்ததால், அவரை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்தாா்.