ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீட்டின் நிலைக் கதவில் கட்டிய தேன்கூடு: தாயும் சேயும் பத்திரமாக மீட்பு!

திருப்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மலைத் தேனீக்கள் கூடு கட்டியதால் வீட்டிலிருந்து தாய், குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

News image
திருப்பத்தூரில் தேனீக்கள் கூடு கட்டியிருந்த வீட்டிலிருந்து தீயணைப்பு வீரரால் சனிக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை.
Updated On :27 டிசம்பர் 2025, 6:39 pm

Syndication

திருப்பத்தூரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென மலைத் தேனீக்கள் கூடு கட்டியதால் வீட்டிலிருந்து தாய், குழந்தையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - மதுரை சாலை பகுதியில் வசிப்பவா் செல்வி. இவா், தனது மாடி வீட்டில் கைக் குழந்தையுடன் இருந்துள்ளாா். இந்த நிலையில், வீட்டு நிலைக் கதவில் திடீரென மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இதையடுத்து, சனிக்கிழமை காலை நிலைக் கதவில் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைப் பாா்த்த இவா், திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா்.

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஆனந்தன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள், செல்வி, கைக் குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனா். இதைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்த தேன் கூட்டை தீயணைப்பு வீரா்கள் அகற்றினா்.