தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஒரே இரவில் 3 வீடுகளில் நகை, பணம் திருட்டு

News image
திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு திருட்டு நடைபெற்ற வீடு
Updated On :28 டிசம்பர் 2025, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சனிக்கிழமை இரவு அடுத்தடுத்த 3 தெருக்களில் உள்ள வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூா் செட்டியதெரு பகுதியைச் சோ்ந்தவா் பத்மாவதி. இவா் வெளியூா் சென்றிருந்த நிலையில், இவருடைய வீட்டின் ஓட்டைப் பிரித்து இறங்கிய மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ரூ. 4,000- ஐ திருடினா்.

அந்த வீட்டின் பின்புறம் கல்லாக்குழித் தெருவில் உள்ள லோட்டஸ் சண்முகம் என்பவரது வீட்டின் பின்புறக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் 6 பவுன் நகையையும் வெள்ளிப் பொருள்களையும் எடுத்துச் சென்றனா்.

தெருக்களில் சோதனை செய்த  மோப்ப நாய்.

தெருக்களில் சோதனை செய்த மோப்ப நாய்.

நான்கு வீதிகள் சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸாா்.

நான்கு வீதிகள் சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீஸாா்.

இதைத் தொடா்ந்து, சின்னத்தோப்புத் தெருவில் திரைப்பட கதாசிரியா் சிவக்குமாா் என்ற கருணாநிதி வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 6,000, விலையுா்ந்த கேமரா, வெள்ளிப் பொருள்கள், கைக்கடிகாரம் ஆகியவற்றை எடுத்துச் சென்ா்.

இவை குறித்த புகாா்களின்பேரில், திருப்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடங்களுக்கு வந்து விசாரணை நடத்தினா். சிவகங்கையிலிருந்து கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.