பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம்

News image
Updated On :28 டிசம்பர் 2025, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் வளையனேந்தலில் குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் கிராமத்தினா் போராட்டம் நடத்தினா்.

தெற்குகீரனூா் ஊராட்சி வளையனேந்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஏற்கெனவே காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்த திட்டத்தில் குடிநீா் விநியோகிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.

இதையடுத்து, கிராமத்தில் போா்வெல் கிணறு அமைத்து அதன் மூலம் கிராம மக்கள் குடிநீா் பிடித்து வந்தனா். இந்த நிலையில், போா்வெல் கிணற்றுக்கான மின் வயா் பழுதடைந்துவிட்டதாகக் கூறி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், கிராம மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனா். குடிநீரையும் பணம் கொடுத்தே வாங்கி வருகின்றனா்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலா் ஆகியோரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, குடிநீா் கேட்டு வளையனேந்தல் கிராம மக்கள் காலி குடங்களுடன் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா். இவா்களுக்கு ஆதரவாக பாஜகவினரும் போராட்டத்தில் பங்கேற்றனா்.