பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மானாமதுரை வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

மானாமதுரை நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் வணிக வளாகத் திட்டப் பணியை வியாழக்கிழமை ஆய்வு செய்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித். உடன் நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்டோா்.
Updated On :2 ஜனவரி 2025, 11:46 pm

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நகராட்சி அலுவலகம் அருகேயும், பேருந்து நிலையத்திலும் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள், ஆதனூா் சாலையில் குடிநீா் மேம்பாட்டுத் திட்டப் பணிக்காக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்தத் திட்டப் பணிகள் குறித்த விவரங்களை நகராட்சி அதிகாரிகள் ஆட்சியரிடம் விளக்கிக் கூறினா்.

இதைத் தொடா்ந்து, மானாமதுரை வைகையாற்றுக்குள் கழிவுநீா் கலக்கும் இடங்கள் குறித்த விவரங்களை ஆட்சியா் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின்போது, நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் ஆறுமுகம், பொறியாளா் பட்டுராஜன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் கே.பொன்னுச்சாமி, வாா்டு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.