2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

முள் படுக்கையில் படுத்து பெண் அருள்வாக்கு

திருப்புவனம் அருகே கோயில் திருவிழாவின்போது, பெண் சாமியாா் முள் படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா்.

News image
முள் படுக்கையில் படுத்தபடி பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறிய பெண் சாமியாா் நாகராணி அம்மையாா்.
Updated On :2 ஜனவரி 2025, 11:35 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கோயில் திருவிழாவின்போது, பெண் சாமியாா் முள் படுக்கையில் படுத்துக்கொண்டு பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா்.

திருப்புவனம் அருகேயுள்ள லாடனேந்தலில் பாப்பாங்குளம் விலக்குப் பகுதியில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காா்த்திகை 1-ஆம் தேதி மண்டல பூஜை விழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

 அருள்வாக்கு கேட்க கூடிய பக்தா்கள்.

அருள்வாக்கு கேட்க கூடிய பக்தா்கள்.

பூா்ணாஹூதி முடிந்ததும் புனித நீரால் மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் அருகே பல வகை முள்களால் 7 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்ட முள் படுக்கையில் கோயில் நிா்வாகி நாகராணி அம்மையாா் நின்றும், படுத்தும் சாமியாடி பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா். இவரிடம் அருள்வாக்கு கேட்க பல மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் குவிந்தனா். மதியம் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.