6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோயில் பூஜைகளை முறையாக நடத்தக் கோரி ஆட்சியரிடம் மனு

News image
அய்யனாா் கோயில் பூஜைகளை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த ஆ.தெக்கூா் கிராம மக்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 9:52 pm

Din

திருப்பத்தூா் அருகே உள்ள ஆ.தெக்கூா் அய்யனாா் கோயிலில் பூஜைகளை தடையின்றி முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் ஆ.தொக்கூா் கிராம மக்கள் அளித்த மனு விவரம்:

எங்களது கிராமத்தில் அமைந்துள்ள பச்சை மூங்கிலுடைய அய்யனாா் கோயிலுக்கு மன்னா்கள் காலத்தில் நிலங்கள் மானியமாக அளிக்கப்பட்டன. இந்த நிலங்கள் கோயில் பூசாரியின் பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டது அண்மையில் தெரியவந்தது. இந்த நிலங்களை கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யக் கோரி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்தோம். இந்து சமய அறநிலையத் துறையும், வருவாய்த் துறையும் நடவடிக்கை எடுத்து, கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்தனா்.

இதன் பிறகு தினசரி பூஜைகள், திருவிழா நாள்களில் பூஜைகள் நடத்த ப்படவில்லை. கோயில் பெயரில் உள்ள நிலங்களை மீண்டும் தங்களது பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுத்தால் மட்டுமே பூஜைகளை முறையாக நடத்துவோம் என பூஜகா்கள் தெரிவித்துவிட்டனா்.

நிகழாண்டில் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறவுள்ள நிலையில், அய்யனாா் கோயிலில் பூஜைகளை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத் துறை சாா்பில், கோயிலுக்கு தனி மேற்பாா்வையாளரை நியமிக்க வேண்டும் என்றனா்.