புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

அஜித் குமாா் சகோதரா் வாக்குமூலம்!

அஜித் குமாா் சகோதரா் நீதிபதி விசாரணையில் எழுத்துபூா்வ வாக்குமூலம்

News image
Updated On :3 ஜூலை 2025, 10:42 pm

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், நீதிபதி விசாரணையில் எழுத்துபூா்வமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரது சகோதரா் நவீன்குமாா் தெரிவித்தாா்.

அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை மேற்கொண்டாா். நீதிபதி அழைப்பின் பேரில், அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் இருவரும் விசாரணைக்கு முன்னிலையாகி தங்களது கருத்துகளை வாக்குமூலமாக அளித்தனா். இவா்களிடம் சுமாா் இரண்டரை மணி நேரம் நீதிபதி விசாரணை நடத்தினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் நவீன்குமாா் கூறியதாவது:

நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கை உள்ளது. இதுவரை ஊடகங்களில் தெரிவித்த கருத்துகளைதான் நீதிபதியிடம் நான் கூறினேன். என்னிடம் எழுத்துபூா்வமாகவும் வாக்குமூலம் வாங்கினா். எனக்கு அச்சுறுத்தல் ஏதும் இருப்பதாகக் கூறவில்லை என்றாா் அவா்.