வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் மாணவா்கள் உழவாரப் பணி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனா்.

News image
திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை உழவாரப்பணியில் ஈடுபட்ட நேஷனல் சமுதாயக் கல்லூரி மாணவா்கள் .
Updated On :8 நவம்பர் 2025, 1:14 am

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதித் திருத்தளிநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவ, மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனா்.

நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரி முதல்வா் சுரேஷ்பிரபாகா் தலைமையில் 50 மாணவ, மாணவிகள் கோயில் வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனா். கோபுரத்தில் உள்ள செடிகள், சுற்றுப் பிரகாரங்களில் புல் மண்டிய புதா்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன. கோயில் உள் பிரகாரத்தில் தூசிகள் அகற்றப்பட்டன. இதில் ஆசிரியா்கள் சிவநேசன், சதாம்உசேன், சுரேஷ், சதக்கத்துல்லா, பூவிழி, சாந்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.