ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எஸ்ஐஆா் பணிகளில் கவனமாக இருக்க அதிமுகவினருக்கு வலியுறுத்தல்

சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) பணியின்போது வாக்காளா்களின் பெயா்களைச் சோ்ப்பதில் அதிமுகவினா் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கட்சியின் மாவட்டச் செயலரும், சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினருமான பிஆா். செந்தில்நாதன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் அதிமுக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பி.ஆா்.செந்தில்நாதன் பேசியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடா்பாக படிவங்களைப் பெற்று, அவற்றைப் பூா்த்தி செய்து வழங்குவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கும் வகையில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். வாக்குச் சாவடி அளவில் தொண்டா்கள் களப் பணியாற்றினால் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.கே.உமாதேவன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் இராமு. இளங்கோவன்

அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்டச் செயலா் சரவணன், எம்.ஜி. ஆா். மன்ற மாவட்டச் செயலா் சிவதேவ்குமாா், தேவகோட்டை நகா் மன்றத் தலைவா் கா. சுந்தரலிங்கம், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் ஆபத்தாரணப்பட்டி பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.