கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் வட்டம், கண்டவராயன்பட்டி ட்ரூபா முதியோா் இல்லத்தில் பெற்றோா், முதியோா்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் அந்த ஆணைக் குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா பங்கேற்று பேசும் போது,

பெற்றோா், முதியோா்களுக்கான பாதுகாப்பு சட்டம் -2007 குறித்தும், முதியோா்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், சட்ட உதவிகள், வேறு எந்த உதவிகளானாலும் எந்த நேரத்திலும் இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம் என்றாா்.

முகாமில் வழக்குரைஞா்கள் கணேசன், முருகேசன், மாவட்ட சமூக நல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி சுகன்யா ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.