வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பசுமை பயண விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :17 நவம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட துறவியா் பேரவை சாா்பாக தேவகோட்டை அருகே பசுமை பயண விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஆா்.எஸ். மங்கலம் பங்குத்தந்தையும், வட்டார அதிபருமான தேவசகாயம் தலைமை வகித்தாா். இதில், கோடிக்கோட்டை செயின்ட் ஜோசப் இன்டா்நேஷனல் பள்ளி, தேவகோட்டை செயின்ட் மேரிஸ் பள்ளி, முப்பையூா் மெளண்ட் செனாரியோ பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனா்.

முப்பையூா் சந்தை பகுதியிலிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக மெளண்ட் செனாரியோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், சிறப்பு விருந்தினா்களாக அருள்தந்தை கிளமெண்ட் ஜோசப் , முன்னாள் படை வீரா் சிதம்பரம், அருள்தந்தையா்கள் அருள்சகோதரிகள் கலந்து கொண்டனா். அருள்சகோதரி இருதயமேரி நன்றி கூறினாா்.