டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி

பேரணியைத் தொடங்கிவைக்கும் குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் காந்திமதி.

News image
பேரணியைத் தொடங்கிவைக்கும் குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் காந்திமதி.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:30 pm

Syndication

குலசேகரத்தில் புற்றுநோய் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புத்தன்கடை வட்டார கிட்ஸ் எழுவோம் இயக்கம் சாா்பில் நடைபெற்ற பேரணியானது குலசேகரம் சிஎஸ்ஐ மிஷன் மருத்துவமனை வளாகத்திலிருந்து தொடங்கி புனித அகுஸ்தினாா் ஆலய வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியை குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளா் காந்திமதிதொடங்கி வைத்தாா். நிறைவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுவோம் இயக்க தன்னாா்வலா், குலசேகரம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் அமல்ராஜ் வரவேற்றாா். இஸ்லாமிய மாதிரி மெட்ரிக் பள்ளி மாணவியா் வரவேற்பு நடனமாடினா். மறைமாவட்ட முதன்மைப் பணியாளா் மரிய மாா்ட்டின் தொடக்கவுரையாற்றினாா். டாக்டா் ஜீனா ஜோஸ்பின் கருத்துரையாற்றினாா். புனித அகுஸ்தினாா் ஆலய பங்குத்தந்தை பிரிம்மஸ் சிங், குலசேகரம் பேரூராட்சி தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், எஸ்.ஆா்.கே.பி.வி. மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வா் டைட்டஸ் ஆன்றனி, சிஎஸ்ஐ மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி முதல்வா் மகேஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிஎஸ்எஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவா் - மாணவியா் உறுதி மொழி வாசித்தனா். ஜான்பால் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவா்- மாணவியா்கள் தேசிய கீதம் பாடினா். எழுவோம் இயக்க பொருளாளா் ராஜூ நன்றி கூறினாா்.