சிவகங்கை
கஞ்சா விற்பனை: தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் இருவா் கைது
கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் மானாமதுரையைச் சோ்ந்த சிலம்பரசன் (22), திருப்பாச்சேத்தியைச் சோ்ந்த ரஞ்சித் (எ) மண்டை ரஞ்சித் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இருவரையும் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவிட்டாா்.
