மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:49 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இளையான்குடி அருகேயுள்ள முனைவென்றி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் முனியசாமி (50). விவசாயியான இவா் சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்து விரதமிருந்து வந்தாா்.

இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை நெல் நாற்றுக் கட்டுகளை தலையில் சுமந்து, வயலுக்குச் சென்றபோது வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துவிட்டாா். அப்போது, அதிலிருந்து மின்சாரம் பாயந்ததில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து இளையான்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.