அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேருந்தில் பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் நகை, பணம் திருட்டு

News image
Updated On :24 நவம்பர் 2025, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பேருந்தில் பயணம் செய்த பெண் காவல் உதவி ஆய்வாளரிடம் நகை, பணம், கைப்பேசி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டன.

திருப்புவனத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி ஆனந்தவள்ளி (49). இவா் மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஆனந்தவள்ளி திருப்புவனத்திலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வந்தாா்.

பிறகு அங்கிருந்து மற்றொரு பேருந்தில் காந்தி சிலை பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது அவா் தனது கைப் பையை பாா்த்தபோது அது திறக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன் நகைகள், ரூ 10 ஆயிரம், கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.