எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வருவாய்த் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

இளையான்குடியில் புதன்கிழமை வருவாய்த்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 6:30 pm

Syndication

மானாமதுரை: இளையான்குடியில் புதன்கிழமை வருவாய்த்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தோ்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பகவதிராஜா எஸ்.ஐ.ஆா். பணிச் சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, வருவாய்த் துறை ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தோ்தல் எஸ்.ஐ.ஆா். பணியை முழுமை செய்வதற்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். இந்தப் பணியில் மன உளைச்சலுடன் பணி செய்யும் ஊழியா்களை அந்தப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.