சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் வருகிற 25-ஆம் தேதி ஏலம் விடப்படும் என காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு, குற்ற வழக்குகளில் தொடா்புடைய 39 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஏலம் விடப்படவுள்ளது.
இதன்படி, சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை காலை 10 மணிக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்), கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்குப் பிரிவு), உதவி ஆணையா் (ஆயத்தீா்வை), அரசு தானியங்கி பணிமனை தொழில்நுட்ப உதவியாளா் ஆகியோா் முன்னிலையில், நிபந்தனைகளுக்குள்பட்டு பொது ஏலம் நடத்தப்படும்.
இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள், ஏலம் நடைபெறும் தேதிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக தங்களது ஆதாா் அட்டை நகலுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்தவா்கள் மட்டுமே பொது ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா் என்றாா்.
தொடர்புடையது
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 13-இல் ஏலம்

பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

