இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பள்ளியில் தொங்கும் நூலகம் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்ட தொங்கும் நூலகத்தில் புத்தகம் வாசித்த மாணவா்கள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் இளம் வயது மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் தொங்கும் நூலகம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். இதில் ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில் தொங்கும் நூலகம் அமைக்கப்பட்டது.

தேவகோட்டை ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ், மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், மிக எளிதாக புத்தகங்களை வாசிக்கவும் இந்த நூலகம் பயன்படும் என்றாா்.

முன்னதாக, ஆசிரியை வள்ளிமயில் வரவேற்றாா். ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினாா்.