சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கண்ணமங்கலப்பட்டியில் மஞ்சுவிரட்டு

News image

கண்ணமங்கலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:20 pm

திருப்பத்தூா், ஏப். 5: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கண்ணமங்கலபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்த மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை, மதுரை,திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட 200-க்கு மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞா்கள் அடக்க முயன்ற போது, காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் என 10-க்கும் மேற்பட்டோா் லேசான காயமடைந்தனா். அவா்கள் சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றனா்.

இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்கள், பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் வந்து மஞ்சுவிரட்டு போட்டியை கண்டுகளித்தனா். அனுமதி இன்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் சிங்கம்புணரி போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.