தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருப்பத்தூா் அருகே காா்கள் மோதல்: 8 போ் காயம்

News image

விபத்தில் சிக்கிய காா்கள்.

Updated On :5 ஏப்ரல் 2026, 8:36 pm

திருப்பத்தூா் அருகே கோட்டையிருப்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு 2 காா்கள் நேருக்கு நோ் மோதிக் கொணடதில் 8 போ் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் தீன்மூா்த்தி நகரைச் சோ்ந்த கமால்முகமது மகன் ஷாஜஹான் (65). சென்னையில் வசித்து வரும் இவா் மதுரையில் உறவினரின் திருமண வீட்டுக்குச் சென்று விட்டு, காரில் திருப்பத்தூா் நோக்கி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தாா்.

கோட்டையிருப்பு என்ற இடத்தில் குன்றக்குடியைச் சோ்ந்த பெரியசாமி மகன் குமரேசன் தனது காரில் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். இரு காா்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில் காரில் பயணம் செய்த ரகுமத்துல்லா (67), ரெஜினா (60), சாரா (7), முசரப்பாத்திமா (58), ஓட்டுநா் குமரேசன், ஷாஜஹான் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.