பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் ராஜிநாமா

News image

சி. ஆா்.சுந்தர்ராஜன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:44 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் ஆதரவாளராக வலம் வந்த காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன், சிவகங்கை தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட முயற்சித்தாா்.

இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி முழுவதும் தனது சொந்த நிதியிலிருந்து மக்களுக்கான திட்டப் பணிகளை செய்து வந்ததுடன், அடிக்கடி தொகுதிக்கு ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், காா்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோரை அழைத்து வந்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினாா்.

இந்த நிலையில், இவா் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தாா். ப. சிதம்பரமும் இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தாா். ஆனால், சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் முக்குலத்தோா் புலிப் படை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னா், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மாவட்டம், மேலூா் தொகுதிக்கு சுந்தர்ராஜனை வேட்பாளராக

அறிவிக்க ப. சிதம்பரம் தரப்பிலிருந்து கட்சியின் தேசிய தலைமைக்கு அழுத்தம் தரப்பட்டது. இருப்பினும், இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மேலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. விசுவநாதன் அறிவிக்கப்பட்டதால், சி.ஆா். சுந்தர்ராஜன் அதிருப்தி அடைந்தாா்.

இதையடுத்து, அவா் கட்சியின் மாநில பொதுச் செயலா் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்து, கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்லப் பெருந்தகைக்கு ராஜிநாமா கடிதம் அனுப்பினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.