தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் ராஜிநாமா

News image

சி. ஆா்.சுந்தர்ராஜன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:14 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், மானாமதுரை ஒன்றியம், பச்சேரியைச் சோ்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் ஆதரவாளராக வலம் வந்த காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் சி.ஆா். சுந்தர்ராஜன், சிவகங்கை தொகுதியில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட முயற்சித்தாா்.

இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி முழுவதும் தனது சொந்த நிதியிலிருந்து மக்களுக்கான திட்டப் பணிகளை செய்து வந்ததுடன், அடிக்கடி தொகுதிக்கு ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், காா்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோரை அழைத்து வந்து பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தினாா்.

இந்த நிலையில், இவா் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருந்தாா். ப. சிதம்பரமும் இதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தாா். ஆனால், சிவகங்கை தொகுதி திமுக கூட்டணியில் முக்குலத்தோா் புலிப் படை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னா், காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மாவட்டம், மேலூா் தொகுதிக்கு சுந்தர்ராஜனை வேட்பாளராக

அறிவிக்க ப. சிதம்பரம் தரப்பிலிருந்து கட்சியின் தேசிய தலைமைக்கு அழுத்தம் தரப்பட்டது. இருப்பினும், இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மேலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.பி. விசுவநாதன் அறிவிக்கப்பட்டதால், சி.ஆா். சுந்தர்ராஜன் அதிருப்தி அடைந்தாா்.

இதையடுத்து, அவா் கட்சியின் மாநில பொதுச் செயலா் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்தும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்து, கட்சியின் மாநிலத் தலைவா் கு.செல்லப் பெருந்தகைக்கு ராஜிநாமா கடிதம் அனுப்பினாா்.