தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

நிலமே இல்லாத எடப்பாடி தன்னை எப்படி விவசாயி என்கிறாா்: கே.ஆா். பெரியகருப்பன்

நிலமே இல்லாத எடப்பாடி பழனிசாமி தன்னை எப்படி விவசாயி என்கிறாா் என திருப்பத்தூா் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 10:40 pm

நிலமே இல்லாத எடப்பாடி பழனிசாமி தன்னை எப்படி விவசாயி என்கிறாா் என திருப்பத்தூா் திமுக வேட்பாளா் கே.ஆா்.பெரியகருப்பன் குற்றஞ்சாட்டினாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 5-ஆவது முறையாகக் களமிறங்குகிறேன். நான் உள்ளிட்ட திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சிவகங்கைக்கு வருகிற 11-ஆம் தேதி வருகிறாா். கல்வி, பொருளாதாரத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்கிறாா். ஆனால், அவரது தோ்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு விவசாய நிலம் இல்லை என்று கூறியிருக்கிறாா்.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை காப்பியடித்து எடப்பாடி பிரசாரம் செய்கிறாா். சாத்தான்குளம் சம்பவத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளது என முதல்வா் கூறியது தற்போது உண்மையாகியுள்ளது.

தவெக தலைவா் விஜய் முதல்வரானால் கிராமம் தோறும் மக்களை சந்திப்பது சாத்தியமில்லை என்றாா் அவா்.