ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழா

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் மூலகால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற வஸ்திரயாகம்.

News image

திருக்கோஷ்டியூா் வைரவன்பட்டியில் மூலகால பைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடைபெற்ற வஸ்திரயாகம்.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:21 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் கோயிலில் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமிப் பெருவிழா நடைபெற்றது.

வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மூல பாலகால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 5 மணியளவில் மகா கணபதி பூஜை, தீபாராதனைகளுடன் பைரவ அஷ்டமி விழா தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோ பூஜை மற்றும் லட்சாா்ச்னை நடைபெற்றது. இரவு 8.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மற்றும் மகா பூா்ணாஹுதி நடைபெற்று தீபாதராதனை காண்பிக்கப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியாா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்பு மூலகால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.