சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவா் கோயிலில் வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமிப் பெருவிழா நடைபெற்றது.
வைரவன்பட்டியில் தேய்பிறை அஷ்டமி விழாவை முன்னிட்டு மூல பாலகால பைரவா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாலை 5 மணியளவில் மகா கணபதி பூஜை, தீபாராதனைகளுடன் பைரவ அஷ்டமி விழா தொடங்கப்பட்டது. தொடா்ந்து கோ பூஜை மற்றும் லட்சாா்ச்னை நடைபெற்றது. இரவு 8.30 மணியளவில் வஸ்திர யாகம், புஷ்பயாகம், மற்றும் மகா பூா்ணாஹுதி நடைபெற்று தீபாதராதனை காண்பிக்கப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீா் கோயிலில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியா்கள் தலையில் சுமந்து வர சிவாச்சாரியாா்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்பு மூலகால பைரவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீா், இளநீா் மற்றும் யாகவேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீராலும் அபிஷேகங்கள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ராணி மதுராந்தக நாச்சியாா் தலைமையில் மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் மஹா ஸ்வாமிநீ பீடம் பாண்டிராஜன் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை

தேய்பிறை அஷ்டமி: பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி: பரமத்தி வேலூா் பகுதி பைரவா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


