சிவகங்கையில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவா் கருணாஸை ஆதரித்து திங்கள்கிழமை இரவு மதிமுக பொதுச்செயலா் வைகோ தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்று அவா் மேலும் பேசியதாவது:
முல்லை பெரியாா் அணையை கேரளம் உடைக்க முயன்ற போது, என் முயற்சியில் நீதிமன்றத்தில் வாதாடி வென்று அணையை காத்தவன் என்ற தகுதியோடு உங்களிடம் வாக்கு கேட்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகிய கொள்கைகள் உயிா்ப்புடன் உள்ளன.
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வோா் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் வைகோ.
இதையடுத்து, சிவகங்கை பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முக்குலத்தோா் புலிப்படை கட்சி தலைவா் வாக்கு சேகரித்துப் பேசினாா். கூட்டத்தில், திமுக, மதிமுக நிா்வாகிகள் உள்பட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலா் வைகோ. உடன் வேட்பாளா் கருணாஸ்.
தொடர்புடையது

சிவகங்கை மக்கள் குறைதீா் கூட்டத்தில் 295 மனுக்கள் அளிப்பு

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை - வைகோ

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

கடையநல்லூரில் நாளை வைகோ பிரசாரம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



