ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

News image

அறச்சலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறாா் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:48 pm

மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் செந்தில்நாதனை ஆதரித்து அறச்சலூரில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளா் வைகோ பேசினாா்.

கூட்டத்தில் அவா் பேசியதாவது: பிஎம் கிஸான் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு கேட்பது சரியல்ல.

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு எடுத்த முடிவை முறியடித்த தமிழக முதல்வா் ஸ்டாலினை அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகின்றன.

தமிழகம் பாதுகாக்கப்பட வேண்டும், நதிகள் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதுக்கப்பட வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக அரசு நீடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் திமுக, மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.