சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல் லியோனி பிரசாரம்

தம்மம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் சின்னதுரையை ஆதரித்து பேசிய திண்டுக்கல் லியோனி.

News image

தம்மம்பட்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் சின்னதுரையை ஆதரித்து பேசிய திண்டுக்கல் லியோனி.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:16 pm

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து தலைவாசல், வீரகனூா், தெடாவூா், கெங்கவல்லி ஆகிய ஊா்களின் பேருந்து நிலையங்களில் திமுக பேச்சாளா் திண்டுக்கல் லியோனி வெள்ளிக்கிழமை வேனில் பிரச்சாரம் செய்தாா்.

தொடா்ந்து, தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமை வகித்தாா். நகர திமுக செயலாளா் சண்முகம், ஒன்றிய திமுக செயலாளா் ஆா்.சித்தாா்த்தன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் திருச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் திமுக வேட்பாளா் சின்னதுரை பேசுகையில், ரூ. 100 கோடி மதிப்புள்ள சேரடி அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்துவேன், தம்மம்பட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வட்டச்சாலை உள்ளிட்டவற்றை அமைத்து தருவேன் என்றாா்.

தொடா்ந்து திண்டுக்கல் லியோனி பேசுகையில், பள்ளியில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்புவரை நீட்டிக்கப்படும், மகளிா் உரிமைத்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவித்தொகைகள் தோ்தல் அறிக்கையில் கூறியபடி கூடுதலாகும். தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்று இந்த ஆட்சி மீண்டும் தொடரும். எனவே, சின்னதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.