அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

பேரவைத் தோ்தல்: 4 நாள்கள் மதுக் கடைகளுக்கு விடுமுறை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்.

Updated On :18 ஏப்ரல் 2026, 12:28 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வருகிற 21, 22, 23 ஆகிய தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 -ஆம் தேதி ஆகிய 4 நாள்களுக்கு மதுக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக் கூடங்கள், தனியாா் மது அருந்தும் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் வருகிற 21, 22, 23, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ஆகிய தேதிகளில் முழுவதுமாக அடைக்கப்படும் என்றாா் அவா்.