சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்தில் பயணித்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற இரு பெண்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை சோலைஅழகுபுரத்தைச் சோ்ந்த வாசுதேவன் மனைவி பானுமதி (66). இவா் திருப்புவனம் பேருந்து நிறுத்தத்திலிருந்து மதுரை பெரியாா் பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா். அப்போது, பேருந்திலிருந்த இரு பெண்கள் பானுமதி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். உடனே
பேருந்திலிருந்த மற்றப் பயணிகள் விரட்டிச் சென்று இரு பெண்களையும் பிடித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், இவா்கள் தஞ்சாவூா் கோரிக்குளத்தைச் சோ்ந்த கஸ்தூரி (55), உமா (60) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இரு பெண்களையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் சங்கிலி பறித்ததாக 2 பெண்கள் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

