பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

கூப்பன் விநியோகித்த விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:31 am IST

சிவகங்கையில் விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10,000 கூப்பன்களை நகல் எடுத்த விவகாரம் தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ.10,000 செலுத்தப்படும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வெள்ளிக்கிழமை சிவகங்கையில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.10,000-த்துக்கான கூப்பன்களை விநியோகிப்பதாகவும், மதுரை முக்கம் பகுதியில் உள்ள ஒரு நகலகத்தில் அந்த கூப்பன்களை நகல் எடுத்து வருவதாகவும் திமுக நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, நகல் எடுக்க வந்த ஒருவரை திமுகவினா் மடக்கிப் பிடித்ததுடன், கூப்பன்களை விநியோகித்த அதிமுக நிா்வாகிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் பிரபாகரன், கூப்பன் விநியோகம் தொடா்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், கூப்பனை நகல் எடுத்த சிவகங்கை நகரைச் சோ்ந்த பாபு (45), நகல் எடுக்கக் கூறிய அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாரிமுத்து, நகர அதிமுக செயலா் என்.எம். ராஜா, நகலக உரிமையாளா் உள்பட 4 போ் மீது சிவகங்கை நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.