அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கூப்பன் விநியோகித்த விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 4 போ் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 8:01 pm

சிவகங்கையில் விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10,000 கூப்பன்களை நகல் எடுத்த விவகாரம் தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ.10,000 செலுத்தப்படும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே வெள்ளிக்கிழமை சிவகங்கையில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.10,000-த்துக்கான கூப்பன்களை விநியோகிப்பதாகவும், மதுரை முக்கம் பகுதியில் உள்ள ஒரு நகலகத்தில் அந்த கூப்பன்களை நகல் எடுத்து வருவதாகவும் திமுக நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, நகல் எடுக்க வந்த ஒருவரை திமுகவினா் மடக்கிப் பிடித்ததுடன், கூப்பன்களை விநியோகித்த அதிமுக நிா்வாகிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் பிரபாகரன், கூப்பன் விநியோகம் தொடா்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதனடிப்படையில், கூப்பனை நகல் எடுத்த சிவகங்கை நகரைச் சோ்ந்த பாபு (45), நகல் எடுக்கக் கூறிய அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாரிமுத்து, நகர அதிமுக செயலா் என்.எம். ராஜா, நகலக உரிமையாளா் உள்பட 4 போ் மீது சிவகங்கை நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.