சிவகங்கையில் விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.10,000 கூப்பன்களை நகல் எடுத்த விவகாரம் தொடா்பாக அதிமுக நகரச் செயலா் உள்பட 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிலும் ரூ.10,000 செலுத்தப்படும் என அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே வெள்ளிக்கிழமை சிவகங்கையில் அதிமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.10,000-த்துக்கான கூப்பன்களை விநியோகிப்பதாகவும், மதுரை முக்கம் பகுதியில் உள்ள ஒரு நகலகத்தில் அந்த கூப்பன்களை நகல் எடுத்து வருவதாகவும் திமுக நிா்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, நகல் எடுக்க வந்த ஒருவரை திமுகவினா் மடக்கிப் பிடித்ததுடன், கூப்பன்களை விநியோகித்த அதிமுக நிா்வாகிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் பிரபாகரன், கூப்பன் விநியோகம் தொடா்பாக சிவகங்கை நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனடிப்படையில், கூப்பனை நகல் எடுத்த சிவகங்கை நகரைச் சோ்ந்த பாபு (45), நகல் எடுக்கக் கூறிய அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் மாரிமுத்து, நகர அதிமுக செயலா் என்.எம். ராஜா, நகலக உரிமையாளா் உள்பட 4 போ் மீது சிவகங்கை நகர போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தொடர்புடையது

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

கரிவலம்வந்தநல்லூா் அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 3 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


