மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அடங்கிய பெட்டி.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:37 am IST

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை தொகுதியில் 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 393 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், 786 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காரைக்குடி தொகுதியில் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 388 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரை தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி யிடுகின்றனா். இங்கு 369 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலக வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியா் மீ. சிவராமன், துணை வட்டாட்சியா் தனபாலன், மலைச்சாமி, வருவாய் ஆய்வாளா் ஆ. பிரபு, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.