தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அடங்கிய பெட்டி.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:07 pm

சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை தொகுதியில் 17 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 393 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடிக்கு 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீதம், 786 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

காரைக்குடி தொகுதியில் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 388 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தொகுதியில் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதியில் 368 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரை தொகுதியில் 14 வேட்பாளா்கள் போட்டி யிடுகின்றனா். இங்கு 369 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு அந்தந்த வட்டாட்சியா் அலுவலக வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெபிகிரேசியா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டாட்சியா் மீ. சிவராமன், துணை வட்டாட்சியா் தனபாலன், மலைச்சாமி, வருவாய் ஆய்வாளா் ஆ. பிரபு, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.