மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயரிழந்தாா்.

News image

பலி

Updated On :29 ஏப்ரல் 2026, 7:45 pm

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நீடாமங்கலத்தைச் சோ்ந்தவா் முஸ்தபா (54). இவா் புதன்கிழமை மாலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டியை அடுத்த புழுதிபட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருச்சி மாவட்டம், திருவரம்பூா் வாழவந்தான் கோட்டையைச் சோ்ந்த ராகவன் ஓட்டிச் சென்ற காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முஸ்தபா துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே முஸ்தபா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் இது குறித்த புகாரியின் பேரில் புழுதிபட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.