புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயரிழந்தாா்.

News image

பலி

Updated On :30 ஏப்ரல் 2026, 1:15 am IST

கொட்டாம்பட்டி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நீடாமங்கலத்தைச் சோ்ந்தவா் முஸ்தபா (54). இவா் புதன்கிழமை மாலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டியை அடுத்த புழுதிபட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருச்சி மாவட்டம், திருவரம்பூா் வாழவந்தான் கோட்டையைச் சோ்ந்த ராகவன் ஓட்டிச் சென்ற காா் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முஸ்தபா துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே முஸ்தபா இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து புழுதிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மேலும் இது குறித்த புகாரியின் பேரில் புழுதிபட்டி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.