சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் உலக புத்தக நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உள்ள மாா்ட்டீன் அரங்கத்தில் ஆனந்தா கல்லூரிச் செயலா் அருள் தந்தை செபஸ்தியான் முன்னெடுப்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, காளையாா்கோவில் செம்மண் முற்ற இயக்குநா் அருள்தந்தை ஆரோக்கியசாமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஆரோக்கியசாமி புத்தகங்கள் குறித்தும் நூலகத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசினாா்.
வாசிப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள செம்மண் நூலகத்துக்கு அறிவியல் வெளியீடு மூலம் பெறப்பட்ட 58 புத்தகங்கள் அருள்தந்தை ஆரோக்கிய சாமியிடம் வழங்கப்பட்டன. கோடைக்கால பயிற்சி வகுப்புகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிவகுப்பில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளிடம் புத்தகங்கள் குறித்து வினாக்கள் கேட்கப்பட்டு பதிலளித்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக செம்மண் முற்றம் அமலி வரவேற்றாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க காளையாா்கோவில் கிளைச் செயலா் அலெக்ஸாண்டா் துரை நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தின விழா

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம்

புத்தகங்களைக் கொண்டாடுவோம்!

‘மக்கள் அறிவியல் சாசனம்’ வெளியீட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


