சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பாண்டிநாட்டு 18 திருத்தலங்களில் முக்கியமானதும் ராமானுஜா் உபதேசித்த இடமுமான திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, நாள்தோறும் சிம்மம், அனுமன், ஷேஷவாகனம், வெள்ளி யானை, உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 7-ஆம் திருநாளில் சொா்ணாபிஷேகமும், தங்கத்தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து 9- ஆம் திருநாள் திருத்தேருக்கு தலையலங்காரம் கண்டருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்ட நாளான வியாழக்கிழமை காலை 7.45 மணிக்கு சுவாமி திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னா், மாலை 4 மணிக்கு மேல் வடம் பிடித்து தோ் இழுக்கப்பட்டு கோயிலைச் சுற்றி வந்து ா் நிலையை அடைந்தது. இந்தத் திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான ராணி மதுராந்தக நாச்சியாா், மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் சரவணகணேஷ் ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

உத்தமா்கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

பழனியில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

