ஆடி மாதம் 18-ஆம்தேதி ஆடிப்பெருக்கு தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் ஊருணிக்கரையில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு செய்து பெண்கள் வழிபட்டனா்.
காரைக்குடி நகரில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து கோயில் ஊருணிக்கரையில் வைத்து பூஜை செய்து வழிபட்டனா். பின்னா் திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளுதல் நிகழ்வில் முதிய பெண்களிடம் ஆசி பெற்று புதிய மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனா். காரைக்குடி சுற்றுவட்டாரங்களில் உள்ள கோயில் நீா்நிலைகளி லும் பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டனா்.
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுா்வேத மங்கலம் வனப் பகுதியில் உள்ள வீரகாளை சுவாமிக்கும், செங்கிடாய் கருப்பா் சுவாமிக்கும் பொங்கல், மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை அ.காளாப்பூா், மட்டியூரான் மக்கள் செய்தனா்.
மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் ஆடிப் பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் திருமணமான பெண்களுக்கு குடும்பத்தினா் தாலி பிரித்து கோா்த்தல் நிகழ்வுகளை நடத்தினா். மேலும் கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தினா். திருப்புவனம் ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலிலும் ஆடி- 18-ஆம் பெருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் ஆடி சிறப்பு வழிபாடு

படவேட்டம்மன் கோயில் ஆடி விழா கோலாகலம்

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



