ஆடிக் காா்த்திகையையொட்டி, மானாமதுரை ஒன்றியம், வெள்ளிக்குறிச்சியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை பழனி பாதயாத்திரைக் குழு தலைவரும், தொழிலதிபருமான ராமகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். இதில் 1,008 பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினா். இவா்களுக்கு சேலைகள், குத்துவிளக்குகள் வழங்கப்பட்டன.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா்.



பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீழ்வீராணம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா

சிங்கம்புணரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ஆடி வெள்ளி பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருவிளக்கு பூஜை

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



